அலைகின்றேன் தெய்வமே
உன்னைத் தேடி தேடி அலைந்தேன்
வாழும் தெய்வமே
உந்தன் ஒளியை என்று காண்பேன்
வாழ்வின் தெய்வமே - என்றும்
வாழும் தெய்வமே
உள்ளம் உண்மை நெறியில் சென்றால்
தெய்வம் தோன்றிடும்
அன்பில் அறிவை நாளும் வளர்த்தால்
நெஞ்சம் வாழ்ந்திடும்
நீதி இங்கு நிலைத்து நின்றால்
ஜோதி தெரிந்திடும்
உள்ளங்களே உள்ளங்களே
உணர்ந்து கொள்ளுங்கள் - இன்று
உணர்ந்து கொள்ளுங்கள்
விண்ணை நோக்கும் உந்தன் பார்வை
மண்ணில் திரும்பட்டும்
கண்ணில் புதிய ஒளியினைக் கொள்ளும்
எண்ணம் தோன்றட்டும்
புதிய வானம் புதிய பூமி காட்சி காணட்டும்
நெஞ்சங்களே நெஞ்சங்களே
உணர்ந்து கொள்ளுங்கள் - இன்று
உணர்ந்து கொள்ளுங்கள்