Saturday, May 29, 2010

உலகமெல்லாம் எனக்கு ஆதாயம்

உலகமெல்லாம் எனக்கு ஆதாயம்
என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்கு ஆதாயம்
என வாழ்ந்தால் கவலையில்லை
அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவை காப்பதா
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவி நாடுகிறோம்
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் எதுவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்

No comments:

Post a Comment