அறியாத பேரின்ப கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகு
அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்
வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்
துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு
உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்
தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் காட்டு
நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்
பனி வேகந்தனில் இன்னும் பலம் ஊட்டு
அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு
இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு
மலர் வாசம் தரும் பூவில் இழப்பில்லை
மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை
தானே தன் கனி உண்ணும் செடி இல்லை
தனக்கென்றே வாழ்ந்தால் விண் விடிவில்லை
இளகாத மனம் செய்தல் பணி இல்லை
இறங்காத இதயத்தில் இறை இல்லை
தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்
அன்புள்ளம் இறை தந்த வரமாகும்
இனிமையான பாடல் ; அன்பின் வல்லமையையும், பண்பையும் சிறப்பாக கூறும் கிறிஸ்த்தவ பாடல். வரிகளை இணையத்தில் வழங்கிய உங்களுக்கு நன்றி.
ReplyDelete